யோவான் 14: 22 – 31
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்
இன்று அட்வெந்து நாட்களின் இரண்டாம் ஞாயிறு. தியானிக்கும்படி கொடுக்கப்பட்டுள்ள பொருள் சமாதானம். சில திருச்சபைகளின் ஒழுங்கின்படி நம்பிக்கையையும் (hope), விசுவாசத்தையும் (faith) தனித்தனியாக முதல் இரண்டு வாரங்களில் நினைகூரும் பழக்கமும் இருந்துவருகிறது. நாம் இன்று சமாதானத்தைக் குறித்து தியானிப்போம். யோவான் 14: 27ஐ மறுபடியும் வாசியுங்கள். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதனத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறார். உன் சூழ்நிலையில் புயலடித்துக் கொண்டிருந்தாலும் உன் இருதயத்தில் உலகம் தரமுடியாத ஒரு சமாதானத்தைத் தரக்கூடியவர் இயேசு ஒருவரே. அந்த சமாதானத்தை நீ அனுபவித்திருக்கிறாயா? எந்தெந்த பொருட்களுக்காகவோ ஜெபிக்கிறாயே, உன் உள்ளத்தின் சமாதானத்திற்காக ஜெபிக்கிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, நீரே சமாதானப் பிரபு. நான் கலங்காமலும் பயப்படாமலும் இருக்கும்படி நீரே எனக்கு சமாதானத்தைத் தாரும். ஆமென்.