யோவான் 16: 12 – 22
அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும்
உலகம் தரக்கூடிய மகிழ்ச்சி நிரந்தரமானதல்ல. குழந்தையாய் இருக்கும்போது சில விளையாட்டுப் பொருட்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. வாலிப வயதை அடையும்போது, அந்த விளையாட்டுப் பொருட்கள் அற்பமாகக் காணப்படுகின்றன. வேறு விதமான பொருட்களும் (gadgets) அனுபவங்களுமே மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. நடுவயதில் மகிழ்ச்சியைக் கொடுப்பவை முற்றிலும் வேறுபட்டவை. நித்திய வாழ்வின் மகிழ்ச்சி நிரந்தரமானது. நமது ஆர்வமும் வாஞ்சையும் இயேசுவின் மீதும், நித்திய வாழ்வின் மீதும் இருக்குமானால் இவ்வுலகம் தரும் மகிழ்ச்சியின் நிச்சயமற்ற தன்மையை உணர்ந்து கொள்வோம். (சங்கீதம் 16:11)
Turn your eyes upon Jesus
Look full in His wonderful face
And the things of earth will grow strangely dim
In the light of His glory and grace.
ஜெபம்:
ஆண்டவரே, உம்மையே எப்பொழுதும் நோக்கியிருக்கும் இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.