காலைத் தியானம் – டிசம்பர் 23, 2022

யோவான் 21: 1 – 14

இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன், அவர் கர்த்தர் என்றான்   

                           மீன் பிடிக்கச் சென்ற எல்லா சீடர்களும் கரையிலே நின்றுகொண்டிருந்த இயேசுவைப் பார்த்தார்கள். அவர் பேசுவதைக் கேட்டார்கள். அவரைப் பார்த்தும், அவர் பேசுவதைக் கேட்டும், அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ”அன்பு” அவரை அடையாளம் கண்டுபிடித்துவிட்டது. ஆம், இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் மட்டும் தான் அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் கர்த்தர் என்றான். இயேசு நம்மிடம் இன்றும் வருகிறார். அடிக்கடி பேசுகிறார். நாம் அவர் மேல் நம் முழு இருதயத்தோடு அன்பு செலுத்தினால், அவரைக் காண முடியும். அவர் பேசுவதைக் கேட்கமுடியும். (உன்னதப்பாட்டு 2: 8, 16)         

ஜெபம்:

ஆண்டவரே, என் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும், குறிப்பாக துன்பப்படுகிறவர்களின் உருவில் நீர் வரும்போதும், உம்மை அடையாளம் கண்டுகொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.