காலைத் தியானம் – ஜனவரி 18, 2023

நீதி 18: 1 – 24   

மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்                     

                           எப்பொழுதுமே நாம் திருமணம், கணவன்- மனைவி உறவு இவைகளைக் குறித்து கேலியாகவும் கிண்டலாகவும் எதிர்மறையாகவுமே பேசி பழகியிருக்கிறோம். அதிலும் மனைவியைக் குறித்து நன்மையானவைகளை நாம் பேசுவதில்லை. ஆனால் வேதாகமம் பாருங்கள், மிக அழகாக சொல்கிறது, மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான் என்று. இன்று உங்களுக்குத் திருமணம் ஆகி ஒரு மனைவி உங்களுக்கு உண்டென்றால், நீங்கள் நன்மையைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதுதான் பரிசுத்த வேதாகமம் சொல்லும் உண்மை. இனி விளையாட்டிற்காகவும் ஐயோ திருமணம் ஆனதிலிருந்து என் சுதந்திரமெல்லாம் போய்விட்டது; என் சந்தோஷமெல்லாம் போய்விட்டது என்று சொல்லாமல், நான் மனைவியைப் பெற்றிருக்கிறேன்; நன்மையானதைக் கண்டடைந்திருக்கிறேன்; என் மனைவி. கர்த்தர் எனக்குத் தந்துள்ள ஈவு என்று எண்ணவும் பேசவும் துவங்குவோம். மனைவியை நீங்கள் பெற்றுக்கொள்ளும் பொழுது கர்த்தரால் தயவையும் பெற்றுக்கொள்கிறீர்கள். அதையும் மறந்த்து விடாதீர்கள்.  

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, என் மனைவி/ என் கணவர் நீர் எனக்குத் தந்திருக்கிற நன்மை என்பதைக் காண எனக்கு உதவிசெய்யும்.  ஆமென்.