கலா 3: 10 – 18
வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்க மாட்டாதே
ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அவனுக்கு தேவ தயவு கிடைத்தது. ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுத்த ஆண்டவர், அவன் நியாயப் பிரமாணங்களின்படி நடந்தானா என்று பார்க்கவில்லை. நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதற்கு, முதலாவதாக ஆபிரகாமின் நாட்களில் நியாயப்பிரமாணம் இருக்கவில்லை. அது 430 ஆண்டுகளுக்குப் பின், மோசேயின் நாட்களில் தான் கர்த்தரால் கொடுக்கப்பட்டது. தேவனுடைய வாக்குத்தத்தங்களை நியாயப்பிரமாணம் அர்த்தமற்றவையாக்காது. வாக்குத்தத்தம் பண்ணியவர், பண்ணுகிறவர் உண்மையுள்ளவர். கர்த்தரையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் விசுவாசிப்போம். அவருடைய தயவு கிடைக்கும் (லூக் 8: 24, 25).
ஜெபம்
ஆண்டவரே, என் செயல்கள் குறைவுபட்டவை. உம்மையே நம்பி வாழ்கிறேன். நீர் என்னைப் பிடித்துள்ள பிடியை விட்டுவிடாதேயும். ஆமென்.