யோவான் 1: 1 – 14
எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி
நற்செய்தி புத்தகங்களை எழுதிய மற்ற சீஷர்களாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, யோவன் இயேசு கிறிஸ்துவை சற்று வித்தியாசமாக அறிமுகம் செய்கிறார். நம் கண்களுக்கும் மூளைக்கும் எட்டியவைகள், எட்டாதவைகள் அனைத்தையும் உருவாக்கியவர் இயேசு கிறிஸ்துவே. மேலும் அவரை வார்த்தை என்றும், மெய்யான ஒளி என்றும் விவரிக்கின்றார். மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்து என்றும் அணையாத நித்திய ஒளி. அவர் இருக்கும் இடத்தில் எந்தவித இருளுக்கும் இடமேயில்லை. இருள் சாத்தானுடைய கோட்டை. இன்று நீ எந்தவிதமான இருளைச் சந்தித்தாலும் அல்லது கடந்து சென்றாலும், மெய்யான ஒளியாகிய இயேசுவே உனக்குத் தேவை. அவர் ஒருவரால் மாத்திரம்தான் உன் இருளை அகற்றமுடியும். கிறிஸ்து பிறப்பை நினைவுகூர்ந்து அதைக் கொண்டாடும் இன்று, மெய்யான ஒளியாகிய இயேசு கொடுக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து அறிந்திருக்கிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, என் வாழ்க்கையில் குறுக்கிடும் இருளை முற்றிலுமாய் அகற்றிவிடும். என்னோடு தங்கியிருந்து, இருள் என்னை நெருங்காதபடி காத்துக்கொள்ளும். ஆமென்.