காலைத் தியானம் – ஜனவரி 23, 2023

நீதி 23: 1 – 35   

பாவக் கட்டுகளிலிருந்து விடுதலை                     

                           மது அருந்துவதைக் குறித்து பரிசுத்த வேதாகமம் நமக்கு பல எச்சரிப்புகளைக் கொடுக்கிறது. மதுவுக்கு அடிமையான எல்லோருக்குமே அந்த பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் நன்றாகத் தெரியும். இந்த பழக்கம் கிறிஸ்து நம்மை எப்படிப்பட்டவராக இருக்கும்படி படைத்திருக்கிறாரோ, அந்த சாயலை இழக்கச் செய்துவிடும். இன்றும் இப்படிப் பட்ட  பழக்கத்தை நம்மில் யாரேனும் கொண்டிருந்தால் அந்த பழக்கத்தை நாம் விட்டுவிட வேண்டும். இயேசு இந்த பாவ கட்டிலிருந்து உங்களுக்கு விடுதலையைச் சிலுவையில் பெற்று கொடுத்துவிட்டார். இனி இந்த பாவத்தில் நீங்கள் கட்டுண்டு கிடக்க அவசியம் இல்லை. இயேசுவே, இந்த பழக்கத்திலிருந்து  நான் விடுதலைப் பெற விரும்புகிறேன்; எனக்கு உதவிசெய்யும் என்று கேளுங்கள். இயேசுகிறிஸ்து உடனே உங்களுக்கு உத்தரவு அருளி உதவிசெய்வார். இதிலிருந்து நீ விடுதலைப் பெறவே முடியாது என்று சொல்லுகிற சாத்தானின் பொய்களை நம்பாதிருங்கள். இயேசுகிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.    

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, மது அருந்தும் பழக்கத்தினாலும், இன்னும் அநேகப் பாவ கட்டுகளினாலும் கட்டப்பட்டு, அவற்றிலிருந்து மீள முடியாமல் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீர் இன்று உதவிசெய்யும். அவர்களுக்குப் பெரிய விடுதலையைக் கட்டளையிடும். ஆமென்.