Site icon Puthuyir

காலைத் தியானம் – மார்ச் 23, 2026

சங்கீதம் 144:1–15

“யுத்தம் பழகிய விரல்கள்” 

எருசலேம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ராஜாவான தாவீதின் கண்கள் விழித்திருந்தன. எத்தனையோ யுத்தங்கள், எத்தனையோ வெற்றிகள். அவன் தன் கரங்களைப் பார்க்கிறான். ஒரு காலத்தில் ஆடு மேய்த்த கைகள்; பின் கோலியாத்தை வீழ்த்திய கைகள்; இப்போது செங்கோலைப் பிடித்திருக்கும் கைகள். இந்த மாற்றத்தை நினைத்துப் பார்க்கையில் அவன் உள்ளம் நெகிழ்கிறது. 

ஒரு சாதாரண மனிதனுக்கு இவ்வளவு கிருபைகளைப் பெற அவன் எம்மாத்திரம்?! தாவீதுக்குத் தெரியும், தன் வாள் வீச்சின் லாவகம் அவனது திறமை அல்ல, அது தேவன் தந்த கொடை என்று. ஆனால், தாவீது வெறும் போர் வெறியன் அல்ல. அவன் கனவு காண்பது யுத்தத்தை அல்ல, ஒரு செழிப்பான சமுதாயத்தை! நாடு செழிக்க வேண்டும், களஞ்சியங்கள் நிரம்ப வேண்டும், வீதிகளில் கூக்குரல் இருக்கக்கூடாது. இது எப்போது நடக்கும்? நாட்டு மக்கள் தேவனைக் கர்த்தராகக் கொள்ளும் போது. துப்பாக்கி ஏந்துவது வீரம் அல்ல; அடுத்தத் தலைமுறையை ஆலயத் தூண்களாகச் செழித்து வளரச் செய்வதே ஒரு தேசத்தின் உண்மையான வெற்றி. 

ஜெபம்:

கிருபையுள்ளவரே, என் பிள்ளைகள் உமக்குள்ளே ஆலயத் தூண்களைப் போல உறுதியாகவும் அழகாகவும் வளரவும், என் குடும்பம் பாக்கியமுள்ளதாகத் திகழவும் ஆசீர்வதித்தருளும். ஆமென்.

Exit mobile version