எபே 1:7-10
கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் பெருகப்பண்ணினார்
பாவமன்னிப்பாகிய மீட்பு தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தினாலே நமக்கு கிடைத்திருக்கிறது. வசனம் 8ல் அந்த கிருபையை நம்மில் அவர் பெருகப்பணினார் என்று சொல்லி இருக்கிறது அல்லவா? பெருகப்பண்ணினார் என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் abound என்று மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கிரேக்க மொழியில் அந்த வார்த்தை super-abound, be in excess, be superfluous என்கிற அர்த்தம் உடைய வார்த்தையாக இருக்கிறது என்று வேத வல்லுநர்கள் கூறுகின்றனர். கிருபையை கர்த்தர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் நம்மிடத்தில் பெருகப்பண்ணி இருக்கிறார். கர்த்தரின் கரத்தில் இருந்து வரும் எந்த ஒவ்வொரு காரியமும் நிறைவானதாக இருக்குமே அன்றி குறைவானதாக இருப்பதில்லை. அவரது கிருபையும் நிறைவானதாகவே நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவரது கிருபை ஒரு நாளும் முடிந்துபோவதில்லை. ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்கு வேண்டிய புதிய கிருபைகள் நமக்கு கொடுக்கப்படுகிறது. அவருடைய கிருபையில் நாம் நிலைத்து இருப்போம்.
ஜெபம்:
என் அன்பு தகப்பனே, சகல ஞானத்தோடும் புத்தியோடும் உம்முடைய கிருபையை எங்களிடத்தில் அதிகமாகப் பெருகச் செய்திருப்பதற்காக நன்றி. ஆமென்.