Site icon Puthuyir

காலைத் தியானம் – மே 11, 2026

திங்கள்                                        பட்டுக் கம்பளப் பாதாளம்!

11-05-2026

நீதிமொழிகள் 1:10-33

சாலொமோன் கண்ட ஞானத்தின் இரண்டாம் இரகசியம் இதுதான்: “பாவிகள் உனக்கு நயங்காட்டினால் சம்மதியாதே!” உலகத்தின் குறுக்குவழிகள் எப்போதும் கவர்ச்சியான பட்டுக்கம்பளம் விரித்தே உன்னை அழைக்கும். உழைக்காமல் கிடைக்கும் செல்வம், குறுக்குவழியில் வரும் வெற்றி எனப் பிசாசு அநேகப் போலி வாக்குத்தத்தங்களை அள்ளி வீசுவான். ஆனால், பிறருக்காக வலையை விரிப்பதாக நினைத்து, இந்த வஞ்சகர்கள் தங்கள் சொந்த ஆத்துமாவுக்கே கண்ணி வைக்கிறார்கள் (வசனம் 18). குறுக்குவழியில் கொள்ளையடிக்கும் அற்ப சந்தோஷம், முடிவில் உன் ஜீவனையே எடுத்துவிடும். தேவன் உனக்கென்று நியமித்திருக்கும் ஆசீர்வாதம், எந்தக் குறுக்குவழியையும் நாடாத நிதானத்தில் அடங்கியிருக்கிறது. மலிவான உலக ஆசைகளுக்காக உன் தரத்தைக் குறைத்துக்கொள்ளாதே! நீ இயேசுவின் இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டவன்/ள்.

ஜெபம்: கர்த்தாவே, மலிவான ஆசைகளுக்காகப் பாவிகளோடு சமரசம் செய்யாமல், உமது கிருபையின் பாதையில் நிமிர்ந்து நடக்க எனக்குப் பெலன் தாரும். ஆமென்.

Exit mobile version