காலைத் தியானம் – மார்ச் 16 , 2023

அப் 15: 1 – 11   

விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி  

                           நியாயப்பிரமாணத்தையும் அதோடு சேர்ந்த விருத்தசேதனத்தையும் ஏற்றுக் கொண்டால்தான் கிறிஸ்தவனாக இருக்க முடியும் என்று ஒரு கூட்டத்தார் கூறினார்கள். அடுத்த கூட்டத்தார் நியாயப்பிரமாணத்தின் மூலமாக ஒருவனும் இரட்சிப்பைப் பெற முடியாது என்றும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதால் மட்டுமே இரட்சிப்பைப் பெறமுடியும் என்றும் சொன்னார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பலவிதமான சர்ச்சைகளின் மூலமாகவும், விவாதங்களின் மூலமாகவும், கொள்கை வேறுபாடுகளின் நிமித்தமாகவும் சாத்தான் விசுவாசிகளைப் பிரித்துக் கொண்டேயிருக்கிறான். நாம் எந்த சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதில் மாத்திரம் கவனமாய் இருக்கவேண்டும். வேறு எந்த வியாக்கியான அறிவும், கொள்கையும் நம்மை இரட்சிக்கப்போவதில்லை.                   

ஜெபம்:

ஆண்டவரே, எங்கள் குறுகிய அறிவும் மனப்பான்மையும் உமது சரீரமாகிய திருச்சபையில் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொண்டே போவதைத் தடுத்து நிறுத்தும். ஆமென்.