காலைத் தியானம் – ஆகஸ்ட் 30, 2026

ஞாயிறு                வீழும் சாம்ராஜ்யங்களும் நிலைநிற்கும் அஸ்திபாரமும்!

30-08-2026

2 இராஜாக்கள் 15:27–38

வடக்கே இஸ்ரவேல் கொலையாலும் வஞ்சகத்தாலும் சீரழிந்து, அசீரியாவின் பிடிக்குள் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தெற்கே, யூதாவின் அரசன் யோதாம் சிம்மாசனமேறுகிறான். சுற்றிலும் எரிகிற குழப்பங்களுக்கு மத்தியில், அவன் தேவனுடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டுகிறான். “அவன் தன் தேவனாகிய கர்த்தரின் வழிகளில் செம்மையாய் நடந்தான்” என்ற சாட்சி அவனை அலங்கரிக்கிறது.

உன்னைச் சுற்றிலும் வஞ்சகர்களும் குறுக்குவழியில் முன்னேறுபவர்களும் செழிப்பதுபோல உனக்குத் தோன்றலாம். அவர்களைப் பார்த்துக் குழம்பாதே! குழப்பங்கள் நிறைந்த இந்த உலகத்தில், தேவனுடைய வழிகளில் நிமிர்ந்து நிற்பவனே முடிவில் நிலைத்திருப்பான். உலகத்தின் ஆரவாரமான இடிபாடுகளுக்கு நடுவே, நீ கிறிஸ்துவாகிய கன்மலையின்மேல் அமைதியாகக் கட்டியெழுப்பும் பரிசுத்த வாழ்வே காலங்களை வென்று மாபெரும் சாட்சியாக நிமிர்ந்து நிற்கும்! 

ஜெபம்: கர்த்தாவே, என்னைச் சுற்றியுள்ள உலகம் எத்துணை குழப்பத்திலும் அநீதியிலும் உழன்றாலும், நான் உமது சத்திய வழியிலிருந்து சிறிதும் விலகாமல் நிலைத்து நிற்க எனக்கு உமது கிருபையைத் தாரும். ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.